அரசு மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்கவும்!

– சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், “சென்னை அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர், செவிலியர் வருகை, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்.

மேலும் பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சோதனை நடந்த மண்டல அளவில் பறக்கும் படை அமைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

You might also like