நடிகையாக அறிமுகமாகும் பாடகி ராஜலெட்சுமி!

தமிழ்நாட்டில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமியை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் புகழ்பெற்றார்கள்.

அதில் கிராமிய பாடல்களைப் பாடி இசை ரசிகர்களின் மனங்களை வென்றார்கள். இறுதியில், சூப்பர் சிங்கர் போட்டியில் முதலிடம் பெற்றார் செந்தில்.

பின்னர், உலக நாடுகள் முழுவதும் இசைக் கச்சேரிகளில் பங்கேற்றனர். சொந்த ஊரில் புதிய வீடும், ஸ்டுடியோவும் கட்டி செட்டிலானார்கள். இன்று வரை கச்சேரியில் பரபரப்பாக இருக்கிறார்கள்.

இதனிடையே செந்தில், ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அது பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதனிடையே, ராஜலட்சுமி புஷ்பா படத்தில் பாடிய ‘வாயா சாமி’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

இந்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் நாயகியாக களமிறங்கி இருக்கிறார்.

கணபதி பாலமுருகன் இயக்கிய ‘லைசன்ஸ்’ என்ற படத்தில் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like