காலாவதி மருந்து விற்பனையைக் கட்டுப்படுத்துக!

சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை!

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளைத் தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்குப் பிறகு, காலாவதியான மருந்து விநியோகத்தைத் தடுக்க பறக்கும் படை அமைத்து திடீர் சோதனை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதோடு, அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து விநியோகத்தை தடுக்க திடீர் சோதனை நடத்த வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பயோ மெட்ரிக் முறையை பின்பற்ற வேண்டும் என  அறிவுறுத்தியது.

You might also like