காதலை உறுதிப்படுத்திய கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்!

நடிகர் கெளதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டது.

வாட்ஸ் ஆப் குரூப்கள் தொடங்கிய காட்சி ஊடகங்கள் வரையில் பேசப்பட்ட காதல் செய்தி.

தற்போது இருவரும் காதலில் விழுந்தது பற்றி அதிகாரபூர்வமாக அறிவி்ததுள்ளார்கள்.

சில புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பகிர்ந்துள்ளனர்.

கெளதம் கார்த்திக் பற்றிப் பதிவிட்டுள்ள மஞ்சிமா மோகன், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்துபோனபோது நீ ஒரு காவலனாய் என் வாழ்வில் வந்தாய்.

வாழ்க்கையைப் பற்றிய என் கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்.

நீ எப்போதும் எல்லாவற்றிலும் என்னுடைய ஃபேவரைட்” என்று காதலாகி கசிந்துருகியுள்ளார்.

கெளதம் கார்த்திக், “சரியான நபர் உங்கள் வாழ்வில் வந்தால் என்ன நடக்கும்? பெரும்பாலானவர்கள் சொல்வார்கள், நீங்கள் அவர்கள்மீது உங்கள் கண்களை வைத்த நொடியில் நீங்கள் அன்பினால் நிறைந்திருப்பீர்கள்.

உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் நீங்கள் உணர்வீர்கள் என்று. அது இப்போது என் வாழ்வில் நடந்திருக்கிறது.

மஞ்சிமா மோகன், நீ நமக்குள் ஏற்படுத்திய உறவை விவரிக்க ‘காதல்’ என்ற வார்த்தைகூட போதுமானதாக இருக்காது. ஐ லவ் யூ” என்று அன்பு மழை பொழிந்திருக்கிறார்.

தமிழில் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானார் மலையாளக் குயிலான மஞ்சிமா மோகன்.

அடுத்து கெளதம் கார்த்திக்குடன் இணைந்து ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தார்.

You might also like