எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள வெங்கட்பிரபு படம்!

நடிகர் நாகசைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது.

ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகும் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிவந்துள்ளது. அதில் நடிகர் நாகசைதன்யாவும் பங்கேற்றிருக்கிறார்.

மைசூரின் அழகிய இடங்கள் பலவற்றில் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வருகிறார் நாகசைதன்யா.

மேலும், அவரது சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரக்கூடிய படமும் இதுதான். இசையில் மேதமைகளான அப்பா- மகன் இணை ‘மாஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா மற்றும் ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர்ராஜா இருவரும் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

You might also like