தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை தேவை!

2022 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கள் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவருவது வழக்கம்.

சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய் வேலை நாளாக இருப்பதால், தீபாவளி அன்றிரவே பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மனத்திருப்தியுடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் கவனித்தால் விடுமுறை அறிவிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. ஒரு நாளில் எப்படி ஆண்டுக்கு ஒருமுறை வரும் பண்டிகை கொண்டாடமுடியும் என்ற கேள்வியுடன் மக்கள் ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

You might also like