ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்!

– அரசாணை வெளியீடு

சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், “தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like