பருந்தாகுது ஊர்க்குருவி: அடர்ந்த காட்டுக்குள் பரபர திரில்லர்!

இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்துள்ளது.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், திறமையான இளைஞர் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ள “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

காட்டுக்குள் நடக்கும் பரபர பயணத்தின் சிறு துளியை அறிமுகப்படுத்தும் வகையில் மிரளவைக்கும் உருவாக்கத்தில் வெளிவந்தது முன்னோட்டம்.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ், “கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்த அடுத்தகட்ட நிகழ்வுகளுமே கதை.

அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம். மாறுபட்ட ஒரு திரில் பயணமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மும்பை மாடல் காயத்திரி ஐயர் நாயகியாக நடிக்கிறார். படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

You might also like