கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு!

– உச்சநீதிமன்றம் தீர்ப்பு

யாருக்கு எந்தச் சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில்  உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அந்தத் தீர்ப்பில், “சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு.

கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி உடைவர்கள். திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு.

கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம்.

பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது” என நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

You might also like