தமிழகம், புதுவையில் இயல்பைவிட 80% மழை அதிகம்!

– சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 252.3 மி.மீ. அளவுக்கு மழை இயல்பாக பதிவாகவேண்டும்.

ஆனால் இயல்பான அளவையும் தாண்டி 455.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது 80 சதவீதம் அதிக மழைப்பொழிவாகும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like