டெல்லியில் ஜனவரி-1 வரை பட்டாசுக்குத் தடை!

– சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய்

வரும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் தனது டுவிட்டர் பக்கத்தில், “டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இந்தக் கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும். தடையைக் கடுமையாக அமல்படுத்த டெல்லி காவல்துறை, டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும்.

டெல்லியில் கடந்த ஆண்டை போல் மாசு அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், இந்த முறையும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like