இனியேனும் கல்வியைப் பெறுங்கள்!

கல்வி கற்றுக் கொள், போ
சுய சார்புள்ளவராக,
சுறுசுறுப்பானவராக இருங்கள்

வேலை செய்யுங்கள்,
அறிவையும்,
செல்வத்தையும் திரட்டுங்கள்

அறிவில்லாதிருந்தால்
இழந்து நிற்போம் அனைத்தையும் –
அறிவிழந்து போனால்
நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.
சும்மா இராதீர்கள்,
போய் இனியேனும்

கல்வியைப் பெறுங்கள்
ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர்
அனைவரது துன்பங்களையும் போக்குங்கள்.
படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது
ஒரு பொன்னான நேரம்

எனவே படியுங்கள்.
தகர்த்தெறியுங்கள் சாதியச் சங்கிலிகளை
வீசியெறிங்கள் பார்ப்பனிய வேதங்களை…!

– இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் ஃபுலே.

You might also like