பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் பற்றியான பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

இதேபோல், உடற்கல்விக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

You might also like