விவசாயிகள் பிரச்சினைகளை ஆராய 4 குழுக்கள் அமைப்பு!

விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஆராய கடந்த மாதம் 18-ம் தேதி ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைத்தது.

முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இக்குழுவில் 26 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுக்கு 3 உறுப்பினர்கள் பொறுப்பு ஒதுக்கப்பட்ட போதிலும், உறுப்பினர்களை நியமிக்காத மோர்ச்சா அமைப்பு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

நாள் முழுவதும் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயிகளின் 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய 4 துணை குழுக்களை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

பல்வகை பயிர்களை பயிரிடுவது, பயிரிடும் முறையில் மாற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகவும் வெளிப்படையாக ஆக்குவது ஆகியவை குறித்து முதல் துணை குழு ஆய்வு செய்யும்.

2-வது குழு, நுண்நீர் பாசனம் பற்றியும், 3-வது குழு இயற்கை விவசாயம் பற்றியும், 4-வது குழு பல்வகை பயிர்களை பயிரிடுவது பற்றியும் ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like