தொண்டர்கள் விருப்பப்படி நடப்போம்!

– ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் சந்திப்பு
*
அ.தி.மு.க பொதுக்குழு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ.பி.எஸ்.

“இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. தொண்டர்கள் விரும்பியபடி நடந்திருக்கிறது.

அ.தி.மு.க தொண்டர்களுக்கான கட்சி. அனைவரும் ஒன்று சேர வேண்டும். 2002-ல் பொதுக்குழு எடுத்த முடிவுப்படியே பதவிகளில் செயல்படுவோம்.

ஒருங்கிணைப்பாளர் என்பது தொண்டர்கள் எனக்குக் கொடுத்த பொறுப்பு. அதைச் சரிவர நிறைவேற்றுவேன். பலரையும் ஒருங்கிணைப்பேன்.

தொண்டர்கள் விருப்பப்படி தான் நடப்போம். அனைவருடனும் கலந்து பேசி உரிய முடிவெடுப்போம்”என்றார் ஓ.பி.எஸ்.

You might also like