“நோ டாஸ்மாக்: கள்ளு ஓ.கே” – அண்ணாமலை

செய்தி : 

“தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அடைத்து விட்டு, கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்”!

– தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு

கோவிந்து கேள்வி :

மதுக்கடைகளில் வர்ற வருமானம் மூலம் தான் ஏதோ வண்டி ஓடிக்கிட்டிருக்குன்னு அரசு தரப்பில் சொல்வாங்கன்னு தெரிஞ்சும் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கீங்க.. பரவாயில்லை..

அந்தக் காலத்தில் பா.ஜ.க. பேசி வந்த சுதேசியம் ரொம்ப லேட்டா உங்களுக்கு ஞாபகம் வத்திருக்கு போலிருக்கு.. இதே கருத்தை பா.ஜ.க ஆளும் எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தச் சொல்லுவீகளா?

75 வது சுதந்திர தினத்தை ஒட்டி புதைஞ்சு போயிருந்த சுதேசி உணர்வெல்லாம் உங்க நினைவுக்கு வந்திருக்கு.. எவ்வளவு அதிசயம் பாருங்க?
*

You might also like