விற்பனைக்கு வந்துள்ள தரமற்ற மருந்துகள்!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதன்மூலம் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அதன்படி, கடந்த மாதத்தில் 1,337 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், ஆன்ட்டி பயாடிக், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 53 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாகும், இதனிடையே, இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

You might also like