பதவிக்குரிய கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள் பிரதமரே!

ராகுல்காந்தி விமர்சனம்

விலைவாசி உயா்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்சனைகளை முன்னிருத்தி காங்கிரஸ் சார்பில் கடந்த 5-ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனா்.

இதை விமா்சித்த பிரதமா் மோடி, “சிலா் கடந்த 5-ம் தேதி கருப்பு உடை அணிந்து கருப்பு தந்திரங்களைப் பயன்படுத்தினா் என்றும் எத்தகைய தந்திரம் செய்தாலும், மக்களின் நம்பிக்கையை அவா்கள் மீண்டும் பெற முடியாது என்றும் மந்திர, தந்திரங்களால் அவா்களது கெட்ட நாட்கள் முடிவுக்கு வரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பிரதமரின் விமா்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் ராகுல்காந்தி தனது ட்விட்டா் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டார்.

அதில், “நாட்டை தவறாக வழிநடத்தியும், பில்லி-சூனியம் போன்ற கருப்பு தந்திரங்கள் குறித்துப் பேசியும் பிரதமா் தனது பதவிக்கான கண்ணியத்தை குறைக்கும் செயலை நிறுத்த வேண்டும். மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மீது அவா் பதில்கூற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like