ஜெயிலர் படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினிகாந்த்!

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவருடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, ரெடி கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார்.

தமிழக ஆளுநரைச் சந்தித்துப் பேசிய பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ஜெயிலர் படப்பிடிப்பு 15 அல்லது 22 ஆம் தேதி தொடங்குவதாக தெரிவித்திருந்தார்.

அன்று அவர் பேசிய பேச்சுதான் இன்றுவரையில் ஊடகங்களில் விவாதமாக தொடர்கிறது.

ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதியே ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிவிட்டதாகப் பேசப்பட்டது.

அதில் ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்பார் எனச் சொல்லப்படுகிறது.

You might also like