கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வு மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 13-ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மாணவியின் உடல், உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், மாணவியின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று,  உடலை மறு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடல் கூறாய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவிக்கவே, மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இரண்டு முறை உடல் கூறாய்வு செய்யும் வீடியோக்களையும் மருத்துவக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தகுந்த தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது .

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்வதற்காக மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளை சிபிசிஐடி காவல்துறையினர் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

You might also like