சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது!

– சென்னை உயர்நீதிமன்றம்

இயக்குநர் த.ச. ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டி நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேலுக்கு எதிராக வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்தப் புகாரை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “நடிகர் சூர்யா, அவரைச் சார்ந்தவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது.

You might also like