பையனூரில் திரைப்பட தொழிலாளர் குடியிருப்பு!

அமைச்சரிடம் கோரிக்கை.

திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் போன்ற பொது பயன்பாடுகளுக்கான கட்டுமானங்களையும் அமைக்க திட்டமிடப்பட்டது.

பையனூர் கலைஞர் நகரம் பணிகளை மீண்டும் தொடர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதாவது, மூன்று ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு மற்றும் திரைப்பட அரங்குகள் அமைக்க அனுமதியையும் திரைப்படத் துறையினர் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்கள் மாண்புமிகு வருவாய் – பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை நடிகர் சங்க பொதுச்செயலாளர் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் அமைச்சரைச் சந்தித்து ஆலோசனை நடத்தி கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

பா.மகிழ்மதி

You might also like