மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

துபுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள துபுல் யார்டு ரெயில்வே கட்டுமான முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

You might also like