அஸ்ஸாம் கனமழை: நிலச்சரிவால் 121 பேர் உயிரிழப்பு!

அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை வெள்ளம், நிலச் சரிவுகளால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 121 ஆக உயர்ந்துள்ளது.

அசாம் வெள்ளத்திற்கு 27 மாவட்டங்களைச் சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்றும், ஒரு சில பகுதிகளில் நேரில் சென்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ், அதிகாரிகளிடமும் விவரங்களைக் கேட்டறிந்தார்.

You might also like