காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ஏக் லவ் யா’

கோடிகளில் வசூல் செய்யும் பான் இந்தியா ஆக்சன் படங்கள் வெளியாவது அதிகரித்தாலும், இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் காதல் கதைகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு.

எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை.

அப்படி ஒரு படம்தான் ஏக் லவ் யா. ரக்ஷிதா பிரேம் தயாரித்துள்ள இப்படத்தை பிரேம்.எஸ் இயக்கியுள்ளார். நாயகனாகப் புதுமுக நடிகர் ராணாவும், நாயகியாக ரச்சிதா ராம் நடித்துள்ளார்கள். இவர்களுடன் சரண்ராஜ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைக்கதையின்படி ஒரு போராட்டத்தில் கதாநாயகன் எப்படி வெற்றிபெறுகிறார் என்பதை ஆக்சன் திரில்லர் பாணியில் சொல்வத்தொடு, இளைஞர்கள் காதலில் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்பதையும்,

உண்மையான காதல் பற்றியும் அழுத்தமாகச் சொல்லி காதலர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக படம் உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் கன்னட பதிப்பு ஏற்கெனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், ஏக் லவ் யா தமிழ், மலையாள பதிப்பு ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பா. மகிழ்மதி

You might also like