இன்னொருவருடன் உன்னை ஒப்பிடாதே!

இன்றைய நச்:

ஒப்பிடுவதை விட்டுவிட்டு இன்னொருவரின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை ஆராய்வதைவிட்டுவிட்டு, தனக்கு என்ன வேண்டும் என்று உண்மையாய் கேட்டுக் கொண்டால் என்னென்ன தகுதிகள் இல்லை என்பது தெரியவரும்.

என்ன தகுதி இல்லை என்று தெரிந்து விட்டால் அதை உருவாக்கிக் கொள்ளும் எண்ணம் வரும். அந்த எண்ணம் திடப்பட்டால் தன்னை தகுதியாக்கிக் கொள்ளும் உழைப்பு வரும்.

உழைப்பு, கடுமையானால் ஒரு நாள் வெற்றி வந்தே ஆக வேண்டும். அது வரும்வரை நெல்முனை அளவுக்கூட சோர்வு இல்லாமல் உழைக்கும் எண்ணம் வரும்.

– எழுத்தாளர் பாலகுமாரன்

You might also like