9-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்பதில் உண்மை இல்லை!

– பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தவறு என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது.

தேர்வு இல்லாமல் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்படும் என்பது தவறு. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கட்டாயம் இறுதித்தேர்வு நடத்தப்படும்.

திட்டமிட்டபடி அடுத்த மாதம் (மே) 6 முதல் 13-ம் தேதிக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்படும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது.

You might also like