அதிநவீன ஆயுதங்களை வழங்க வேண்டும்!

உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்.

உக்ரைன் தலைநகர் கீவ் வந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினர்.

அதன்பிறகு இந்த சந்திப்பு தொடர்பாக மூன்று பேரும் விளக்கமளித்தனர்.

அப்போது, உக்ரைனுக்கு 200 மெட்ரிக் டன் ஆயுதங்களை கப்பலில் அனுப்பி வைத்துள்ளதாக ஸ்பெயின் பிரதமர் தெரிவித்தார்.

டென்மார்க் பிரதமர், 686 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்தார்.

அதன்பின் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “மரியுபோல் நகரின் ஒருபகுதியில் இன்னும் தங்கள் படைகள் உள்ளது. உங்களுக்கு தெரிந்தபடி நிலைமை கடினமாகவும், மோசமாகவும் உள்ளது.

அரசு பணியாளர்கள், பொதுமக்கள், முக்கியமாக பெண்கள் உள்பட பல ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்துகின்றனர். எங்கள் கணிப்புகளின்படி கிட்டத்தட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் மரியுபோலில் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்றார்.

இதனிடையே உக்ரைனுக்கு மேலும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மரியுபோல் நகரை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறுவது கேள்விக்குறியாக உள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.

அடைக்கலம் தேடும் உக்ரேனியர்கள், ஐரோப்பிய நாடுகளில் இருந்து நேரடியாக அமெரிக்கா வரும் புதிய திட்டத்தை பைடன் அறிவித்தார்.

இந்நிலையில் தங்கள் மீது மேற்குலக நாடுகள் விதித்த தடைகளுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் ரஷ்யா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 29 அமெரிக்கர்களுக்கு பயணத் தடை விதித்துள்ளது.

You might also like