‘கருப்பு திராவிடன்’ – புயலைக் கிளப்பிய யுவன்!

‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு இளையராஜா எழுதிய முன்னுரையில் பிரதமர் மோடியை அம்பேத்கருக்கு இணையாக எழுதிய கருத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வருகிறது.

இதற்காக இணையதளங்களிலும் பெரிய கருத்து மோதல் நடந்து வருகின்றன.

இதனிடையே, பிரதமர் மோடி பற்றி எழுதிய தன் கருத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று இளையராஜா கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இளையராஜாவுக்கு எம்.பி. பதவி கிடைக்கப்போகிறது என்றும் அதனால்தான் அவர் இப்படி புகழ்ந்து எழுதியிருக்கிறார் என்றும் சமூக வலைததளங்களில் பலர் எழுதி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ‘கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்’ என்று பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பதிவு இப்போது பரபரப்பாகி இருக்கிறது.

You might also like