பாரம்பரிய முறைகளே என்றும் நிலையானது!

பசுமைப் புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயம், இயற்கையான உணவு முறை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை விவசாயிகளிடையே பரப்பி வந்த இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் – 6, 1938) அவரது சில பொன்மொழிகள்.

  • இயற்கை விவசாயம் என்பதன்
    அடிப்படை இயற்கையுடன்
    இணைந்த உணவு உற்பத்தி.

  • பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
    என மனிதனை மட்டும்
    உயிராகப் பார்க்காமல்
    எல்லாவற்றையும் நம்மோடு
    அரவணைத்துக் கொள்வதே
    ஆன்மீகப் பார்வை.

  • விவசாயம் என்பது
    வியாபாரம் அல்ல
    வாழ்க்கை முறை.!

  • பூச்சி தாக்காத பாரம்பரிய
    ரகங்களை பயிர் செய்ய வேண்டும்.
    மண்ணை வளப்படுத்த வேண்டும்.

  • நம்முடைய தேவைக்காக
    எப்பொழுது சமரசம் ஆகிறமோ
    அப்பொழுதுதான் தீயவற்றின்
    பாதையில் நாம் கால் வைக்கத்
    தொடங்குகிறோம்.

  • ஆன்மீக ரீதியில் பார்க்கும் போது
    மனிதர்களின் நலனை மட்டும்
    பார்த்தால் போதாது.
    அது மிகவும் குறுக்கலான பார்வை.

  • ஒவ்வொரு உயிரும் பிறவற்றை
    சார்ந்தே வாழ்கின்றது என்பதை
    ஆன்மீக ரீதியாகவே உணர முடியும்.
    அறிவியல் ரீதியாக மட்டுமே
    பார்த்தால் அது அழிவினை நோக்கியே
    இட்டுச் செல்லும்.

  • இயற்கை விவசாயத்தை
    சிறப்பாக செய்ய,
    கால்நடை வளர்ப்பு அவசியம்.
    மர வளர்ப்பும் முக்கியமானது.

  • பாரம்பரிய முறைகளே
    என்றும் நிலையானது.

  • விரதமே மகத்தான
    மருத்துவம்.

  • இயற்கை ஒருபோதும் தவறு
    செய்வதில்லை.
    உடல் ஒருபோதும்
    தன் கடமையை
    நிறுத்துவதில்லை.

  • சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
    வீரனை கோழையாக்குவதும்
    இல்லை. கோழையை வீரன்
    ஆக்குவதும் இல்லை.
    அவனை யார் என்று
    அவனுக்கு காட்டும்.

  • பருவநிலை மாற்றம்தான்
    இன்றைக்கு பல்வேறு

    பிரச்சனைகளுக்கும்
    அடிப்படையாக இருக்கிறது.
    அதை சரி செய்ய வேண்டுமானால்
    கண்டிப்பாக காடுகளை
    வளர்க்க வேண்டும்.

  • நஞ்சில்லாத உணவை உற்பத்தி
    செய்ய வேண்டும் என்ற

    உணர்வு வந்துவிட்டால் விவசாயிகள்
    இயற்கை விவசாயத்திற்கு
    மாறிவிடுவார்கள்.

  • 50 வயது வரை உடம்பு தான்
    உன்னதம் என நினைக்கும் மனது,
    அதற்குப் பிறகு ஆன்மாவை
    ஆராதிக்கிறது.

  • மனிதர்களைச் சுற்றியுள்ள மரங்கள்,
    செடிகள், கொடிகள், கால்நடைகள்
    மற்றும் பறவைகள் என அனைத்தும்
    ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சூழல்
    இந்த உலகில் இருக்க வேண்டும்.

  • இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி,
    களைக்கொல்லி, நஞ்சுக்களை
    பயன்படுத்தாத விவசாயம் தான்
    இயற்கை விவசாயம்.

  • உண்ணா நோன்பு
    இருக்கும் போது
    நம் உடலுக்குள் இருக்கும்
    தேவையில்லாத கழிவுகள்
    தன்னாலே வெளியேறி
    விடுகின்றன.
You might also like