குறைபாடற்ற குழந்தைகள் உலகை உருவாக்குவோம்!

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்:

ஆட்டிஸம் குழந்தைகளைத் தாக்கும் முளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட நோய். 1965ல் ஆண்டில் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் டாக்டர் ரூத் சல்லிவன் என்பவர் மன இறுக்கம் கொண்ட அதாவது ஆட்டிஸம் குறைபாடு கொண்ட பிள்ளைகளுக்காக பெற்றோர்களால் ஆட்டிஸம் சொசைட்டி உருவாக்கப்பட்டது.

ஏப்ரல் 2-ம் தேதி சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையால் உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

லைட் இட் அப் ப்ளூ என்றும் அழைக்கப்படும் இந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே நீல நிறத்தை அணிந்து கொள்வார்களாம்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு ‘ஆட்டிசம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழில் ‘மதி இறுக்கம்’ என்பார்கள். இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே.

சாதாரணக் குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக் கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக் கொள்வார்கள்.

ஆஸ்திரியாவில் பிறந்த லியோ கன்னர் என்பவர்தான் முதன் முதலாக இந்த உலகத்திற்கு ஆட்டிசம் என்பதை தெரியப்படுத்தியவர். இவர் 1943-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளைப் பற்றி கூறியிருந்தார்.

ஆட்டிசம் குறைபாடு பற்றிய ஆய்வுகளுக்காக ‘ஆட்டிசம் சொசைட்டி’ என்ற அமைப்பை தொடங்கினார்கள். அதில் இருந்து நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகுதான், அதாவது 2008-ம் ஆண்டில்தான் ஐ.நா சபையால், ஏப்ரல் 2-ம் தேதி ‘உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்’ என்று அறிவிக்கப்பட்டது.

கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.

அதே போல் தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள், போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நீண்டகால குழந்தைகள் என்று சொல்லலாம். அவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு, இந்த சமூகத்திற்கு இருக்கிறது.

அதைக் கருத்தில் கொண்டுதான், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதியை, ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின’மாக கடைப்பிடித்து வருகிறோம்.

எஸ்.கண்ணபிரான், 11-ம் வகுப்பு,

அரசினர் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம்.

– நன்றி: மாலை மலர்

02.04.2022 12 : 30 P.M

You might also like