2-வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்தப் போராட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும்,

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகள் நேற்று (28.04.2022) முதல் நாள் போராட்டம் தொடங்கியது.

இதனால், வங்கி, பேருந்து சேவை என பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. மக்களும் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கிறது.

தமிழகத்தில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன.

காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் பங்கேற்றுள்ளன.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதுபோல பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் போராட்டம் வலுவாக இருந்தது.

தமிழகத்தில் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் முடங்கியது. அரசு பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி 60 சதவீத பேருந்துகள் இன்று ஓடும் என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.

அதன்படி இன்று தமிழகத்தில் 90% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

You might also like