நாடு முழுவதும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

– தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் தகவல்

2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50,035 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது கடந்த 2019-ம் ஆண்டை விட 11.8% அதிகம். 2020-ல் பதிவான 50,035 வழக்குகளில் 30,142 வழக்குகள் மோசடியை உள்நோக்கமாகக் கொண்டவை என்றும், இது மொத்த வழக்குகளில் 60.2% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 6.6% வரை, அதாவது 3,293 வழக்குகள் பாலியல் தொடர்புடையவை என்றும் கூறப்பட்டுள்ளது.

புதுப்புது வழிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஒரு சைபர் குற்ற விசாரணை அமைப்பு கூட இதுவரை நிறுவப்படவில்லை என்றும், எனவே மாநில அரசுகள் சைபர் குற்றங்களைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்ற விசாரணை அமைப்புகளை நிறுவ வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

You might also like