இளம் தலைமுறை வாசகர்களுக்காக…!

கரிசல் இலக்கிய ஆளுமை கி.ராவின் புதுவை வாழ்க்கையில் கடைசி வரை அவருக்கு மிகப்பெரும் துணையாக, உதவிக்கரமாக, நண்பராக, பேரன்பு கொண்ட பிள்ளையாக இருந்தவர் புதுவை இளவேனில்.

கிராவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கையை, படைப்புகளைப் பற்றிப் பேசும் பிரத்யேக இணையதளத்தை இளவேனில் அறிமுகம் செய்திருக்கிறார்.

பேஸ்புக்கில் எழுதியுள்ள அவர், “எப்பொழுதும் போல புத்தாண்டு அன்றும் அப்பாவைச் சந்திப்பேன். புன்னகைப்பார். “வா” என்பார். அவ்வளவுதான். வெவ்வேறு செய்திகளைப் பேசிவிட்டு “என்ன கெளம்பிறியா” என்பார். புத்தாண்டு நாள் முடிந்தது எனக்கு” என்கிறார்.

இலக்கிய வாசகர், நண்பர் ராஜசேகரோடு இணைந்து உருவாக்கிய இணையதளத்தை எஸ்.ராமகிருஷ்ணன், சமஸ் ஆகிய இருவரும் புத்தாண்டு நாளில் தொடங்கி வைத்துள்ளனர்.

கி.ரா எனும் கதை சொல்லியின் கருவூலமாக செயல்படத் தொடங்கியுள்ள இணையதளம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புதிய தலைமுறை வாசகர்களுக்கு கிராவை அறிமுகப்படுத்தும் தளமாக அமையும்.

புதுவை இளவேனிலின் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

இணையதள பக்கத்தைப் பார்வையிட… https://www.kirajanarayanan.com/

-சுந்தரபுத்தன் முகநூல் பக்கத்திலிருந்து…

You might also like