நாடகக் குழுவினருடன் மக்கள் திலகம்!

அருமை நிழல் : 
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பழக்கமானவரான ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடகக் குழுவை நடத்தியதோடு மத்திய அரசின் அதிகாரியாகவும் இருந்தவர்.

‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்கித் தயாரித்த எம்.ஜி.ஆருக்குக் கலர் ஃபிலிம் ரோல் தேவைப்பட்டபோது, அதற்குத் தானே பொறுப்பேற்றுக் கையெழுத்திட்டு வாங்கிக் கொடுத்தவர் ஒய்.ஜி.பி. தான்.

அவர் வீட்டுக்குச் சாப்பிடுவதற்கு எம்.ஜி.ஆரை ஒய்.ஜி.பி அழைத்தபோது, தனது மனைவி ஜானகி அம்மையாருடன் அவருடைய வீட்டுக்குச் சென்றிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஒய்.ஜி.பி.யின் நாடகக் குழுவில் இருந்தவர்கள் தான் சோ, ஜெயலலிதா, அவருடைய தாயார் சந்தியா உள்ளிட்ட பிரபலங்கள்.

அவருடைய நாடகங்களுக்குத் தலைமை தாங்கியிருக்கிற எம்.ஜி.ஆர், ஒய்.ஜி.பி.யின் நாடகக் குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். இதில் ஜெயலலிதாவுடன் கூடவே இருப்பவர் நடிகர் வி.கோபால கிருஷ்ணன்.

You might also like