தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும்!

– உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் கிருஷ்ண எலா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, “உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும் நிலையிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதால் இந்தத் தடுப்பூசியை சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

இந்தத் தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பிலும் சிலர் புகார் அளித்துள்ளனர்.

மற்றொரு பக்கத்தில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியத் தடுப்பூசிகளுக்கு எதிராக வேலை செய்கின்றன.

இந்தியத் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கக் கூடாது என உள்நாட்டிலேயே சிலர் நினைக்கின்றனர்.” என்று பேசிய அவர்,

தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும் என்றும், தாய்மொழியை ஊக்கப்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும்” எனவும் என்.வி.ரமணா வலியுறுத்தினார்.

You might also like