முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக நரவானே நியமனம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிசம்ப் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

அதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்டு பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர்15) அவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில், முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் தற்போது ராணுவத் தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவானேவுக்கு, முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்படும் வரை இவர் இக்குழுவின் தலைவராக இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவால் இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

You might also like