ஒமிக்ரான் அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம்!

– உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு புதிய ஒமிக்ரான் தொற்று குறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானம், “பல மாதங்களாக தடுப்பூசி விநியோகம் தடைப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக தான் ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி சீராகக் கிடைத்து வருகிறது.

உருமாறிய ஒமிக்ரான் வேகம் எடுத்துள்ளது. அதற்கான மருத்துவ ரீதியிலான தாக்கங்களையோ அல்லது தடுப்பூசிகளின் தாக்கங்களையோ நாங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால், நிச்சமாக அது வெல்ல முடியாத ஒன்றல்ல. வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் வைரஸ் தடுப்பு, தடுப்பூசி விநியோகத்தில் நாம் செய்யும் நடவடிக்கைகள் 2022-ல் இந்தத் தொற்று நோயின் பரிணாம வளர்ச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும்.

அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். ஒமிக்ரான் குறித்த அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம் உள்ளது.

வல்லரசு நாடுகளால் தடுப்பூசி பதுக்கப்பட்டால் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.

பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு 2 தவணைகளுக்கு பிறகு 3வது தவணை தடுப்பூசி செலுத்தி வருவதும் தடுப்பூசி தட்டுப்பாட்டை அதிகரிக்கும்” எனக் கூறியுள்ளார்.

You might also like