அடிமைத்தனத்தை ஆதரித்தவரின் சிலை அகற்றம்!

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி மற்றும் சுதந்திர பிரகடனத்தின் முதன்மை எழுத்தாளர் தாமஸ் ஜெபர்சன்.

வர்ஜீனியாவின் காமன்வெல்த் ஆளுநராக இருந்த கான்டினென்டல் காங்கிரசில் உறுப்பினராகவும், முதல் அமெரிக்க வெளியுறவு செயலாளர், அமெரிக்காவின் 2-வது துணைத் தலைவராகவும், வர்ஜீனியாவிலுள்ள சார்லட்டெஸ்வில்லியில் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் நிறுவனராகவும் இருந்தார்.

பல்வேறு அரசு நிறுவனங்கள் செயல்படும் அமெரிக்காவின் புகழ் பெற்ற நியூயார்க் சிட்டி ஹாலில்  தாமஸ் ஜெப்பர்சன் சிலை வைக்கப்பட்டிருந்தது. மக்கள் அதிகம் வந்து செல்லும் வாஷிங்டனில் உள்ள இந்த நினைவுச் சின்னம் நாட்டின் தலைநகரில் பிரபலமானது.

அமெரிக்காவில் அடிமை முறையை ஆதரித்தவர் ஜெப்பர்சன். அவரே 600 அடிமைகளுக்கு உரிமையாளராக இருந்தார். இதனாலேயே அவரது சிலையை வைத்திருப்பதற்கு எதிர்ப்பு இருந்து வந்தது.

இதனால் அவரது சிலையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. சிலை அகற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அகற்றத்திற்கு ஆதரவாகவே அதிக வாக்குகள் கிடைத்தன.

இதையடுத்து இந்தச் சிலையை மாற்றும் பணி 7 மணி நேரம் கவனமாக நடந்தது. அதன்பின் சிலை வரலாற்று புகழ்மிக்க சொசைட்டி ஹாலில் வைக்கப்பட்டது.

தாமஸ் ஜெபர்சன் அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர் என்பதால், இந்த சிலை அகற்றத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

You might also like