சேமித்த பணம் குழந்தைகளின் கல்விக்கு!

– விஷால்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி பெங்களுரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால், “நான் 16 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன். ஆனாலும் சென்னையில் எனக்கு சொந்த வீடு இல்லை. பெற்றோருடன் வசித்து வருகிறேன். சொந்தமாக ஒரு வீடு வாங்க பணத்தை சேமித்து வைத்திருக்கிறேன்.

இந்தச் சேமிப்பு பணத்தை புனித் ராஜ்குமார் ஆதரவளித்து வந்த குழந்தைகளின் கல்வி நலனுக்காக செலவிட முடிவு செய்துள்ளேன்.

வீடு பிறகு வாங்கிக் கொள்ளலாம். அவரது நல்ல சேவையைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதைச் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

You might also like