பத்திரிகையாளர் குடும்ப நிதி; ரூ.5 லட்சமாக உயர்வு!

பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து குடும்ப நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம்; 15 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 3.75 லட்சம்; 10 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 2.50 லட்சம். ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 1.25 லட்சம் ரூபாய் என குடும்ப உதவி நிதியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நிதியுதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வழியாக மாவட்ட கலெக்டரின் பரிந்துரை பெற்று செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவே இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும். அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும்.

இத்திட்டத்திற்கான செலவினங்கள், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். குடும்ப உதவி நிதி திட்டம் அரசாணை வெளியிட்ட நாளில் இருந்து அமல்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like