மத ஒற்றுமைக்கு ஒரு திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு வழிபாட்டு தலமாகும்.

வைப்பார் செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹாவில் முதல் மரியாதை இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது. சந்தனக்கூடு கொடியேற்றம் தொடங்கி கொடியிறக்கம் வரை அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பிள்ளையார்குளம் கிராமத்தில் அரைக்காசு அம்மன் திருவிழாவை தேவர் சமுதாயப் பெருமக்கள் இன்றும் தங்கள் விழாவாகவே கொண்டாடி வருகின்றனர்.

மதத்தை மனதிற்குள் வைத்து மனிதநேயம் போற்றுவோம்.

நன்றி: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

You might also like