மலைக் கள்ளனை உலவ விட்டவர்!

“எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” – உச்சகதியில் டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலை மறக்க முடியுமா?

‘மலைக்கள்ளன்’ படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்.

மலைக்கள்ளன் என்ற நாவலை எழுதியவர் நாமக்கல் கவிஞரான ராமலிங்கம். காங்கிரஸ்காரர்.

இவரது நாவலை மையமாக வைத்துத் தயாரான ‘மலைக்கள்ளன்’ எம்.ஜி.ஆர் நடித்துத் தமிழிலும், வேறு மொழிகளிலும் வெளியாகிப் பெரும் வெற்றியைப் பெற்றது.

கவிதை, நாவல் என்று பல தளங்களில் இயங்கியிருக்கிற நாமக்கல் கவிஞர் எழுதிய “தமிழன் என்றோர் இனமுண்டு” என்ற பாடல் பிரசித்தம்.

அரசவைக் கவிஞராகவும் பதவி வகித்த இவருக்கு ‘பத்மபூஷன்’ உள்ளிட்ட விருதுகள் கிடைத்திருக்கின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் பிறந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் பிறந்த நாள் இன்று.

You might also like