வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து (அக்.4) அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான முறையே பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

முன்னதாக புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதல் கணித்தல் ஆகியவற்றிற்காக சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசெல்மேன் மற்றும் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like