பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் 2-ம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், 3-ம் அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாதிப்பு அதிகரிக்கலாம் என மத்திய அரசின் குழுவும் அறிவுறுத்தியது.

இது குறித்து விளக்கமளித்துள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா, “சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வந்தாலும், பண்டிகைக் காலம் நெருங்குவதால் மக்கள் உச்சகட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதனால் பண்டிகைக் காலங்களான அடுத்து வரும் 6 முதல் 8 வார காலத்திற்கு அனைவரும் உச்சக்கட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட காலக் கட்டத்தை கடந்துவிட்டால், கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

You might also like