விவசாயத்தை விடமாட்டோம் உயிரே போனாலும்!

விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே…
என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே
மண்ண கிண்டும் பொழப்பு இப்போ
மலையேறி போச்சே
சோறு கொடுத்த தேசம்
இப்போ சுடுகாடாச்சே…
இது மாற பசி ஆற கொண்டாடுவோம்…

விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல
விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல…
நாங்க விவசாயத்தை உடமாட்டோம்
எங்க உயிரே போனாலும்
எங்க நியாத்தத்தான் நாங்க கேட்டோம்
இது இல்லடா வியாபாரம்
(விவசாயம்…)

விவசாயம் பண்ணக்கூட ஒரு சொட்டு தண்ணி இல்ல
பட்டினியா கிடக்கிறோம் கூலி வேல ஒன்னும் இல்ல…
மண்ணுல மழையும் இல்ல விதைக்கிற விதையும் இல்ல
கண்ணீர தொடைக்க கூட காவேரி நதியும் இல்ல…

சொந்தமான நிலமும் இல்ல கேட்கலானா உரிமையில்ல
கூலிவேல விவசாயிய பத்தி யாருக்குமே கவலையில்ல…
ரத்த வேர்வ சிந்தி உழைக்கிறோம் அந்த உச்சி வெயிலில
நாங்க வெதச்ச பயிர காப்பாத்தவும் வேற வழியில்ல
பயிர் வாடிப்போயி இருக்குது இந்த வறண்ட பூமியில
இது வானம் பாத்த பூமி தான் எப்ப மாறும் வானில…
(விவசாயம்…)

நிலத்துல உழைக்கிறான் தினக்கூலி விவசாயி
பணத்த தான் மதிக்கிறான் பணக்கார முதலாளி…
தள்ளுபடி செய்யுறண்டா பணக்காரன் கடன
விவசாயியை தள்ளுறாண்டா ஜெயிலுக்குள்ள உடனே…

நஞ்ச நிலத்துலதான் ஒழைக்கிறவன் எல்லாம் கடனாளி
பஞ்ச பணமாக மாத்துறவன் இன்னைக்கு முதலாளி
அட இன்னும்கூட கிடைக்கல நாங்க கேட்ட மானியம்
அதனால தாண்டா விதைக்கல சம்பு சோள தானியம்…
(விவசாயம்…)

– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் வரிகள்.

22.01.2021 11 : 04 A.M

You might also like