கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

                                               (தை பொறந்தா…) 

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்

கல்யாணமாகுமடி தங்கமே தங்கம் 
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி தங்கமே தங்கம்

                                              (தை பொறந்தா…) 

சுத்தச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முற்றத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

                                               (தை பொறந்தா…) 

-1958 ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் ஏ.மருதகாசி.

13.01.2021 02 : 02 P.M

You might also like