அருமை நிழல்:
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் ஒரே தெருவில் குடியிருந்தவர்கள் சிவாஜி கணேசனும், காக்கா ராதாகிருஷ்ணனும். இருவரும் அடுத்தடுத்து பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நடிக்கப் போனவர்கள்.
நாடகம் ஒன்றில் பெண் வேடத்தில் அவர்கள் நடித்தபோது எடுத்த படம் இது.
‘மனோகரா’ படத்தில் இணைந்து நடித்த இவர்கள் இறுதியாக இணைந்து நடித்த படம் ‘தேவர் மகன்’.
பாய்ஸ் கம்பெனி காலம் துவங்கி இருவருக்கும் இடையில் எவ்வளவு நீண்ட கால நட்பு!