நூல் அறிமுகம்:
ஆசிரியர் சுந்தர ராமசாமி அவர்கள் நாகர்கோவிலில் 1931-ல் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951-ல் ‘தோட்டியின் மக’னை தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி.
1951-ல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது.
மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். 1988-ல் காலச்சுவடு இதழைத் தொடங்கி எட்டு இதழ்களையும் ஒரு ஆண்டு மலரையும் வெளியிட்டார்.
சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியுள்ளது.
வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றுள்ளார்.
*
இந்த புத்தகத்தில் கீழ்காணும் 35 தலைப்புகளில் கட்டுரைகள், நினைவலைகள், பொழிப்புரைகள், அணிந்துரைகள் இடம்பெற்றிருக்கின்றன.
1. ந. பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும்
2. ரகுநாதன் : ஒரு சந்திப்பு
3. சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகள்’
4. புதுமைப்பித்தன் : தமிழுக்கு நவீனப் பார்வை தந்தவர்
5. புதைந்த காற்று : கன்னட தலித் எழுத்துகள்
6. சாகித்திய அக்காதெமிப் பரிசும் தமிழ்ச் சூழலும்
7. ஒரு வெளியீட்டகத்தின் கால் நூற்றாண்டு வளர்ச்சி
8. தமிழ்ச் சூழலில் சில சலனங்கள்
9. சுய அறிமுகம் : சில சிதறல்கள்
10. மொழியின் தேய்வும் அதிகாரத்தின் வலுவும்
11. என் படைப்பனுபவம்
12. திருவள்ளுவர் என்னும் நண்பர்
13. ‘தோட்டியின் மகன்’ தமிழுக்கு வந்த கதை
14. தமிழ்வழிக் கல்வி
15. உரையாடல் பின்னணியும் எதிர்பார்ப்பும்
16. புதிய நூற்றாண்டில் சில எட்டுக்கள்
17. நுட்பமும் ஈரமும்
18. அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்
19. பயம் நனவிலும் கனவிலும்
20. இலக்கியவாதிகள் மீது கற்பனை பயம்
21. நவீனத்துவமும் நானும்
22. உடன்பாடும் வேறுபாடும்
23. ரகுநாதன் : காலத்தில் கரையாத அத்தியாயம்
24. திரு. மாலன் அவர்களுக்குப் பதில்
25. இறந்த காலம் பெற்ற உயிர்
26. ஆசையும் குறிக்கோளும்.
27. உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்
28. மு. தளையசிங்கம் பற்றி ‘திண்ணை’க்கு ஒரு குறிப்பு
29. நிழல் குத்து
30. ஆர். ரவீந்திரன்
31. இ.எம்.எஸ்.
32. சி.சு.செல்லப்பா
33. நா. கோவிந்தசாமி
34. தொலைவில் அணைந்த சுடர் : குமார் மூர்த்தி
35. வாசகர் கடிதம்
1995 முதல் 2003 வரை சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள், விவாதங்கள், அஞ்சலிகள், வாசகர் கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல்.
தொ.மு.சியுடன் புதுமைப்பித்தன் பற்றி உரையாடிய குறிப்புகள் முதல் கோட்டயத்தில் தமது பூர்வீக இல்லத்தைக் கண்டுபிடித்த பயணம் வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முணீல் சினுவா ஆச்சிபி வரையிலான மதிப்பீடுகள், மொழி, கல்வி பற்றிய நுட்பமான சிந்தனைகள், கூர்மையான எதிர்வினைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இறந்த காலம் பெற்ற உயிர் அருமையான தலைப்பு. ஆசிரியர் வயதான காலத்தில் தான் பிறந்து வளர்ந்து ஆரம்பப் பள்ளியில் படித்த பள்ளிக்கூட நினைவும் வீட்டு நினைவும் ஒவ்வொரு கிராம நினைவும் வந்துவிட அங்கு சென்று பார்ப்பதை பதிவு செய்திருக்கிறார்.
இதுபோலவே சுஜாதா அவர்களும் சில கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார்.
ஸ்ரீரங்கம் செல்ல வேண்டுமென்றும் அங்குள்ள ஒவ்வொரு தூண்களையும் தடவி பார்க்க வேண்டும் என்றும் ஒவ்வொரு துகள்களிலும் தனது மூதாதையர்கள் ஏழு பரம்பரை முன்னதான மூதாதையர்கள் தடவிக் கொடுத்தத் தூண்களை, மீண்டும் தான் தடவி பார்க்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்து இருப்பார்.
இறந்த காலம் பெற்ற உயிர் என்பதின் மகத்துவம் அந்த எழுத்துக்களை படிக்கும்போது தான் தெரியும்.
படிக்க படிக்க ஆவலோடு இருப்பதோடல்லாமல், அந்த கால நிகழ்வுகளை இந்த காலத்தில் அசை போட்டு படிக்கச் சுவையாக இருக்கிறது.
*****
நூல்: இறந்த காலம் பெற்ற உயிர்!
ஆசிரியர்: சுந்தர ராமசாமி.
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ. 90/-
பக்கங்கள்: 200.