கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைவிழந்த நிலையில் இருந்தபோது செல்வியும் தமிழும் என்னை கலைஞரிடம் அழைத்துச் சென்று, ”சிவக்குமார் வந்திருக்கிறார்” என்று கூறினார்.
அவரது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
அப்போது நான், தமிழருவி மணியன் எழுதிய ‘தவப்புதல்வன் சிவாஜி’ என்ற நூலை கையில் கொண்டுபோயிருந்தேன்.
அதில், ‘மனோகரா’ படத்தில் வரும் சிவாஜியின் வசனமான, “புருஷோத்தமரே…” என்ற வசனத்தை தொலைக்காட்சியில் போட்டு அதிக சத்தத்துடன் வைத்து அவரைக் கேட்க வைக்கலாம் என்று தொலைக்காட்சிப் பெட்டியை அவரது அருகில் வைத்தோம்.
ஒன்றரை நிமிடம் உள்ள உணர்ச்சிபூர்வமான வசனம் என்பதால் அதைப் போட்டு அவரது அருகில் வைத்துவிட்டு பக்கத்தில் சென்று அவரை கவனித்தோம். முகத்தில் எந்த அசைவும் இல்லை.
நாசி, உதடுகளில் அசைவற்றிருந்தார். ஆனால், கண்களில் மட்டும் ஒரு துளிக் கண்ணீர் வழிந்தது. நான் அவருடைய கால்களைத் தொட்டு கும்பிட்டேன்” இதுதான் அவரை நான் கடைசியாக சந்தித்த தருணம்.